Skip to main content

ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

24x7_seithigal
24x7_seithigal

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமம் பெறுவது தலையாய கடமையாகும். இதை வாகனங்களை ஓட்டும் நபர்கள் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் .ஒவ்வொரு வரும் வாகனங்களை இயக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் பயணம் இனிய பயணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

ஓட்டுநர் உரிமத்தை பெறுவது எப்படி ?
மோட்டார் வாகன சட்டம் - 1988 - ன் படி ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

பழகுநர் உரிமம் (LLR) :
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் , வாகனத்தை ஓட்டி பழகுவதற்கு பழகுநர் உரிமம் வேண்டும்.
1. 50CC - க்கு உட்பட்ட அல்லது கியர் இல்லாத இரு சக்கர வாகனத்திற்கு பழகுநர் உரிமம் பெற 16 
    வயதைக் கடந்திருக்க வேண்டும்.
2.கியர் உள்ள இரு சக்கர வாகனம்  மற்றும் இலகு ரக வாகனம் (Light Motor Vehicle) பழகுநர் உரிமம்
  பெற 18 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
3.போக்குவரத்து வாகனங்களுக்கான பழகுநர் உரிமம் பெற 20 வயதை கடந்திருக்க வேண்டும்.
4.பழகுநர் உரிமம் பெற சமந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

தேவையான படிவங்கள் : 

படிவம் -1 , படிவம் -2 மற்றும் படிவம் - 14 (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக பெறபவர்களுக்கு) .

படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
1. இருப்பிட சான்று : 
 (பின்வரும் ஏதேனும் ஒன்று ) ,குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , ஆதார்     அடையாள அட்டை , LIC பாலிசி , மின் கட்டண அட்டை , தொலைபேசி ரசீது , அரசு அல்லது பிற   சம்பள ரசீது , பள்ளி சான்றிதழ் , பிறப்பு சான்றிதழ் , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று     வாக்குமூலம்.

2.வயது சான்று :
பிறப்பு சான்று , LIC பாலிசி , பள்ளிச்சான்று , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று பெற்ற வாக்குமுலம் , அரசு மருத்துவமனை சான்றிதழ் .

3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
 விண்ணப்பத்தாரர் உரிமம் வழங்கும் அதிகாரியின் முன் சென்று அன்றே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம் :
பழகுநர் உரிமம் பெற்ற நபர் , அது பெற்ற நாளில் இருந்து 30 நாட்கள் முடிவடைந்த பின் , அடுத்த 6 மாத காலத்துக்குள் FORM - 4 அல்லது FORM - 5 ( ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மூலம் பெறுபவர்களுக்கு ) பூர்த்திச்செய்து ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
 

driving license 1



ஓட்டுநர் உரிமம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :


1.பழகுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணங்கள்.
3.பிறர் வாகனங்கள் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.

ஓட்டுநர் உரிமம் பெற கட்டணம் :
ஓட்டுநர் உரிமம் (Laminated Type) பெற கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

சேவை கட்டணம் :
1.தனி வாகனங்களுக்கு : ரூபாய் 50.
2. போக்குவரத்து வாகனங்களுக்கு : ரூபாய் 100.

கூடுதல் உரிமம் மேற்குறிப்பு (Endorsement ) 
சில வகை வாகனங்கள் மட்டும் வைத்துள்ளவர்கள் , மேலும் சில வகை வாகன ஓட்டும் உரிமம் கூடுதல் உரிம மேற்குறிப்பு பெறலாம். 

போக்குவரத்து வாகன உரிமம் பெற தேவையான ஆவணங்கள் : 

படிவம் - 8 ஐ பூர்த்து செய்து , அதனுடன் பின்வரும் ஆவணங்களையும் இணைக்க வேண்டும். 

1. ஓட்டுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணம்  , பிறர் வாகனம் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
4. பொதுப்பணி வில்லை ( Public Service Badge ).
கட்டணம் - ரூபாய் 215 மற்றும் சேவைக்கட்டணம் - ரூபாய் 50.
போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் , பொதுப்பணி வில்லை கட்டாயம் பெற வேண்டும். பொதுப்பணி வில்லை பெற விரும்புபவர்கள் , 20 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.மேலும் உரிமம் வழங்கும் அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

கனரக வாகன உரிமம் பெறத்தேவையான ஆவணங்கள் : 

FORM - LTVA , FROM - I & Pa - வை பூர்த்திச்செய்து , அவற்றுடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.ஓட்டுநர் உரிமம்.
2.மருத்துவ சான்றிதழ்.
3.முதல் உதவி சான்றிதழ்.
இதற்கான கட்டணம் - ரூபாய் 215.

அபாயகரமான வாகன ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு :

அபாயகரமான மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்ட , அதற்கான சிறப்பு ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு பெற வேண்டும். அதற்காக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1.போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம்.
2.I.R.T (indian Road Transport) (அல்லது) அஙகீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்.
3. கோரிக்கை மனு கட்டணம் ரூபாய் - 250.

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி : 

ஒரு வெளிநாட்டவரோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியரோ , வெளிநாட்டில் அவர் பெற்ற ஓட்டுநர் உரிமத்தை வைத்து , இந்தியாவில் எந்த வாகனங்களையும் ஓட்ட முடியாது. ஆனால் அவர் சேர்ந்த நாடானது 1949- ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்த நாடாக இருந்தால் மட்டும் , அவர் இந்தியாவில் குறிப்பிட்ட வாகனங்களை மட்டும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி காலம் முடியுறும் தேதி வரை ஓட்டலாம். இந்தியாவில் பெறும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி , ஓராண்டு காலம் வரை செல்லும் . இதே போல் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதியானது. வெளிநாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியருக்கோ வழங்கப்படமாட்டாது. பிற நாடுகளுக்கு அடிக்கடி செல்வோர் , அங்குள்ள வாகனங்களை ஓட்ட பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை இங்கேயே பெறலாம். அதற்கு ஓட்டுநர் உரிமம் ஏற்கெனவே பெற்றவர்கள் , வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகிப்பெறலாம். 

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி பெற தேவையான ஆவணங்கள் :

1.படிவம் - IDPL 1 - யை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
2. ஓட்டுநர் உரிமம்.
3. பாஸ்போர்ட் .
4. விசா .
5.பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூபாய். 500
சேவைக்கட்டணம் - ரூபாய் - 500.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் :
ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த ஒருவர், (ஓட்டுநர் உரிமம் பெற்றவர்) நேரில் ஆஜராகி மறுபரிச்சோதனை  செய்ய வேண்டும்.

புதுப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
படிவம் - 9 , படிவம் - 1 , படிவம் - 1a -வை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.ஓட்டுநர் உரிமம்.
2.வயது சான்றிதழ்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூ 20 (Laminated Type).புதுப்பித்தல் கட்டணம் (ஒவ்வொரு ஆண்டுக்கும்)ரூ 10.

ஓட்டுநர் உரிமம் நகல் (Duplicate Licence) : 

ஓட்டுநர் உரிமம் காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ மனுதாரர் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.  

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1.ஓட்டுநர் உரிமம்.
2. காவல்நிலைய சான்றிதழ் (FIR COPY).
3.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இதற்கான கட்டணம் ரூபாய் - 215. 

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய :
ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்வதற்கு , கோரிக்கை மனுவுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.ஓட்டுநர் உரிமம்.
2.முகவரி சான்று.
இதற்கான கட்டணம் : ரூபாய். 200 மற்றும் சேவைக்கட்டணம் - ரூ.50. 

வாகனப்பதிவு: 
பெரும்பாலும் , வாகன விற்பனையாளர்களே தங்கள் ஏஜென்டுகள் மூலம் வாகனத்தைப் பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் கடனுதவி பெற்று வாகனம் வாங்குபவர்கள் , கடன் கட்டி முடித்த பின் வங்கி அல்லது பைனான்ஸ் தடையில்லா சான்று பெற்று (NOC) , பதிவு சான்றிதழ் , இன்சூரன்ஸ் பாலிசியுடன் படிவம் - 35ஐ அதிகாரியிடம் சமர்பித்து  , பதிவு சான்றிதழில் அடமான நீக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

வாகனம் விற்பனை : 

வாகனம் விற்பனை செய்யும் போது அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் போது , பதிவு சான்றிதழின் பதவு எண் , இயந்திர எண் , அடித்தள எண் உள்ளிட்டவை வாகனத்தில் ஒரு முறை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் படிவம் - 29 மற்றும் படிவம் - 30 ஐ பூர்த்திச்செய்து , அதில் விற்பவரின் கையொப்பத்துடன்  சமர்பித்து , உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஓட்டுநர் உரிமத்தை தொழில்நுட்ப வசதியுடன் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வழங்கி வருகிறது. மேலும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை இணையதள வழியில் அறியலாம். இதற்கான இணையதள முகவரி : https://parivahan.gov.in/parivahan/en/content/driving-licence-0 ஆகும் . அதே போல் ஓட்டுநர் உரிமம் (LICENCE STATUS) தொடர்பான விவரங்கள் அறிய இணையதள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=101 மற்றும் வாகன விவரங்கள் (RC STATUS) அறிய இணைய தள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=102 ஆகும்.


பி .சந்தோஷ் , சேலம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

pmk ramadoss said Transport corporation should not have contract drivers

 

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்  கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்ககூடாது என்றும், அது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படி என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் இந்த முறை கண்டிக்கத்தக்கது.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பில்,‘‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 13ஆம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படியாகும். இதை அனுமதிக்க முடியாது.

 

இந்த புதிய நடைமுறையின்படி ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம், விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 400 ஓட்டுனர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும். நிரந்தர ஓட்டுனர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதை விட குறைவான ஊதியத்தை 400 பேருக்கும் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்கும். அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு வழங்கும். இது தொடக்க நிலை நிரந்தர ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்  பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. சுருக்கமாக கூற வேண்டுமானால், இப்போது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இனி அமைப்பு சாராத தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றப் படுவார்கள். இது போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் செயல் ஆகும்.

 

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத் துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த முறை திணிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை பணியாளர்களின் உரிமையாளராக அரசு தான் இருக்க வேண்டும். மாறாக, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கக் கூடாது. தொழிலாளர்களை காக்க வேண்டிய அரசு அவர்களை கைவிடக்கூடாது.

 

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அதன் நிர்வாகமே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரந்தர ஓட்டுனர்களை நியமித்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஓட்டுனர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை தவிர்க்கவே இத்தகைய குறுக்குவழியை விரைவுப் போக்குவரத்துக் கழகம் கையாள்கிறது. இதை போக்குவரத்துத்துறை கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் அதிகாரிகள் இதை கண்டும் காணாமலும் இருப்பது, உழைப்புச்சுரண்டலுக்கு துணை போவதாகவே பொருள்.

 

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே இந்த அவுட்சோர்சிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே  அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கிவிடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் தாண்டவமாடுகிறது’’ என்று விமர்சித்திருந்தார். முதலமைச்சரால் விமர்சிக்கப்பட்ட நடைமுறையையே அவரது ஆட்சியில் திணிக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முயல்வது எந்த வகையில் நியாயம்?

 

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும் தான் அனைத்துத் துறைகளிலும் பணியில் இருப்பார்கள். அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு  அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்; அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர ஓட்டுனர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Minister discusses with employees who have taken more days off! Minister discusses with employees who have taken leave!

 

தமிழக முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழக, அயனாவரம் பணிமனையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (27/05/2022) ஆய்வு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

 

இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது, தமிழக முதலமைச்சர், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்காக அறிவித்த மகளிருக்கு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட அறிவுறுத்தி உள்ளார்கள். போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும், பொது மக்களுக்கு சேவை செய்கின்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்ற பல்வேறு மனுக்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கோரியே வருகின்றன. அப்படி இருக்கையில், நமது போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கையில் வேலையை வைத்துக் கொண்டு. பணிக்கு வராமல் இருப்பது, நிர்வாகத்திற்கும், தங்கள் குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வேண்டும்.

 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளுக்கும் நான் நேரில் சென்று, நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி. பேருந்துகளை முழுமையாக இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாக கடந்த வாரத்தில் கலைஞர் கருணாநிதி நகர் பணிமனைக்கு சென்று வந்தேன். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளை சேர்ந்த உங்களை சந்திக்கின்றேன்.

 

முதலமைச்சர் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதியினை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே, 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது. ஊதிய நிர்ணயம் பே மேட்ரிக்ஸ்-ல் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.

 

ஏழை எளிய கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், பேருந்துகளை அரசுடைமையாக்கி, போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும். இதன் வாயிலாக தற்பொழுது சுமார் 20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு. சுமார் 1,20,000 பணியாளர்கள் பணிபுரிகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் சுமார் 6 மாநிலங்களில் மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுவும், தலைவர் கலைஞரை முன்னோடியாக கொண்டே மற்ற மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன். கரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருமான இழப்பு மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும், பேருந்து பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள், பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருகை தந்தும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், நடவடிக்கை மேற்கொண்டால், தினம் தினம் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

 

நமது முதலமைச்சர் எங்கு சென்றாலும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அதை போலவே, அவரது பிரதிநிதிகளான எங்களிடம், பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தால், அதற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்த்து வைக்கிறோம். முழுமையாக அனைத்துப் பேருந்துகளையும் இயக்கி, நமது போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்கள்.

 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

அதனைத் தொடர்ந்து, அயனாவரம் பணிமனையில், புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும், பணியாளர்களுக்கான ஓய்வறைகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து பணியாளர்களிடம் குறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்கள்.

 

இக்கூட்டத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பொது மேலாளர்கள். கிளை மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal
 '5 percent pay rise ... '' Interview with Transport Minister Sivasankar!

 

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ''பெண்கள் இலவசமாக பயணிக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு பேருந்து கழகத்திற்கும் தனித்தனியாக நிலை ஆணை இருப்பதை மாற்றி பொதுவான நிலை ஆணை இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள், அத்தனையும் ஏற்று நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் சார்பில் 8 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு சார்பாக முதற்கட்டமாக 01/09/ 2019 ல் இருந்து 2 சதவிகித ஊதிய உயர்வும், 01/01/2022ல் இருந்து அடுத்தகட்ட 3 சதவிகித ஊதிய உயர்வும் என மொத்தம் 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்துள்ளோம்'' என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

spl_news
spl_news

 

ss dmk

 

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் வந்திருக்கிறது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதி கூறி விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

 

தீவிர திராவிட இயக்க பற்றாளரும் கலைஞருக்கு பக்க பலமாக இருந்தவருமான மறைந்த எஸ். சிவசுப்ரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். 1996 – 2001 அரியலூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 2001-2006 அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், 2016 ல் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2021-ல் குன்னம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ss dmk

 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு, 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி செம்பருத்தி என்பவர், எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டும் என மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த மனு குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் நூலகமானது தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், அதனால் அடிக்கடி நூலகம் திறக்கப்படாததையும் அறிந்தார் எஸ்.எஸ்.சிவசங்கர். உடனே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை அமைத்தார். அந்த புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை, எங்கள் ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த மாணவி செம்பருத்தியை வைத்தே திறக்க வைத்தார். அந்த கட்டிட திறப்பு விழா கல்வெட்டிலும் அந்த மாணவி பெயர் இடம்பெறும்படி செய்தார். இதனை திமுகவினரை தாண்டி அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

 

தற்போது (2021) அமைச்சரான உடன், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் சென்று வரும் வகையில், கூடுதல் அரசு பேருந்தை தொடங்கிவைத்த  எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோ காட்சி அப்போது ட்ரெண்ட் ஆனது.

 

ss dmk

 

தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு குறித்து பேசிய ஒரு மாணவிக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் தேவை ஏன் ஏற்பட்டது? திராவிட கட்சிகள் இடஒதுக்கீடு விஷயத்தில் செய்ததெல்லாம் என்னவென்று மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தார்.

2011ல் எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரன் இதழில் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய தொகுதிகளில் அரியலூர் தொகுதி கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஜெயங்கொண்டம், குன்னம் தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இதில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.சிவசங்கர், தான் போட்டியிட்ட குன்னம் தொகுதியைப்போலவே மற்ற இரண்டு தொகுதிகளிலும் கடுமையாக வேலை பார்த்து வெற்றி பெற வைத்தார்.

 

ss dmk

 

2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் களத்தில் போட்டியிலிருந்த போது யார் முதல்வராக வருவார்கள் என்ற விவாதமும் கருத்துக்கணிப்புகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது பணி நிமித்தமாக கார்நாடகா போயிருந்த சிவசங்கரிடம் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  நக்கீரனில் கர்நாடக சட்டமன்ற தேர்தலைப் பற்றி கட்டுரையாக எழுதினார், அதில் உறுதியாக குமாரசாமி தான் முதல்வராக வருவார் என்றும் எழுதினார்.

 

அந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக கணிசமான ஓட்டு வாங்கியிருந்தது. ஆனால் குமாரசாமியோ குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தார். ஆட்சியமைக்கப் போன எடியூரப்பாவால் ஆட்சியமைக்க முடியாமல் போன போது, அடுத்தபடியாக கவர்னரை சந்திக்கப்போன குமாரசாமி தான் முதல்வராக ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அவரது வெற்றிக்கு அரும்பாடுபட்டார். தேர்தல் முடிவின் இழுபறியின் போது கடைசிவரை உடன் இருந்து வெற்றியை உறுதி செய்யும் வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தார்.

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக சமூகநீதி கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் பல இளைஞர்களைத் திராவிட சிந்தனைகளில் ஈர்த்தவர். சோழன் ராஜா ப்ராப்தி, மக்களோடு நான், தோழர். சோழன் ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.

 

ss dmk

 

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை ஒதுக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட அவர், தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இளைஞர்களுக்குத் தொடர்ச்சியாக திராவிட இயக்க கொள்கைகள் குறித்த வகுப்புகளை எடுத்து வந்தார். அமைச்சரான பின்னரும் அந்த வகுப்புகளை எடுத்து வந்தார். அந்த வகையில், 29 மார்ச் 2022 அன்றும், இளைஞர்களுக்கு வழக்கம்போல் திராவிட இயக்க கொள்கைகள், திராவிட மாடல் குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, இலாக்கா மாற்றப்பட்ட தகவல் அவருக்கு வந்தது.

 

கடந்த காலங்களில் அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாநில அளவில் பெரிய அமைச்சரவை பொறுப்பு யாருக்கும் கிடைத்ததில்லை, தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று பல்வேறு தரப்பினர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Only 10% of buses are operating in Chennai ... Passengers suffer!

 

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பாரிமுனை, அண்ணா நகர், வடபழனி, தியாகராயநகர் பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று விட்டு சென்னை திரும்பியவர்களுக்குப் பேருந்து கிடைக்காததால் அவதிக்குள்ளாகினர். சென்னை மட்டுமில்லாது. அதேபோல் விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் குறைந்தளவே செல்வதால் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், மெட்ரோ ரயில் போன்றவற்றில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாநில எல்லைக்குள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

 

சென்னையை பொறுத்தவரை 3,175 மாநகர பேருந்துகள் உள்ள நிலையில் 318 பேருந்துகள் (10.02 சதவிகிதம்) பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 47 எஸ்.இ.டி.சி பேருந்துகளில் 40 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் 27.82 சதவிகிதம் பேருந்துகளும், சேலத்தில் 37.94 சதவிகிதம் பேருந்துகளும், கோவை கோட்டத்தில் 21.56 சதவிகிதம் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !