Skip to main content

ஈழத்தில் வைகோவுக்கு சிலை வைப்போம்! - ஈழக் கவிஞர். காசி ஆனந்தன்

spl_news
spl_news

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன்.

"வைகோவைப் பார்த்து இன்றைக்கு சிலர் தெலுங்கர் என்று சொல்லுகிறார்கள். எனக்கு தெரியும் நான் தமிழீழத்தை சேர்ந்தவன், நான் சொல்லுகிறேன். வைகோ தெலுங்கர் என்று சொன்னால் நானும் தெலுங்கர். நான் தமிழன் என்றால் வைகோவும் தமிழன். ஆதித்தனார் அவர்களுடன் நான் இருந்தவன், அவர் என்ன கொள்கை கொண்டு இருந்தார் என்பது எனக்கு தெரியும். ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன் என்னோடு என்னைப்போல் இருந்த தமிழன் அவன் இடைக்காலத்தில் மாறுகிறான். காலச் சூழலில் தெலுங்கன் ஆகிறான். அவனது நாடும் இனமும் உருவாகிய பிறகு, அவன் இன்னொரு இனம் அவனை மதிக்க வேண்டும். ஆனால் அவன் இன்னொரு தெலுங்கனாக மாறிப் போவானவன். ஆனால் இன்றும் நான் தமிழன்தான் இன்றும் உலகத்தில் நான் தமிழனாகவே வாழ்வேன் என்றால் அவனை விட தமிழன் யாரும் இல்லை என்கிறார் ஆதித்தனார்.
 

kasi aananthan

 

 

 

தமிழ் இன விடுதலை புலி போராட்டத்திற்கு முதல் முறையாக 20 கோடி ரூபாய் தந்தது, முதலும் கடைசியும் அவன்தான். அவன் ஒரு திராவிடன் பெயர் எம்.ஜி.ஆர். அதை மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு எந்த தமிழன் தந்தான். திராவிடன்தான் தந்தான். இன்றைக்கு  எம்.ஜி.ஆர்.க்கு நாங்கள் யாழ்ப்பாணத்தில் சிலை வைத்திருக்கிறோம். எங்கள் விடுதலைப் புலி போராட்டத்தில் இருவரை இன்றும் தலைவராக காலகாலமாக நாங்கள் கருதிகிறோம். இன்று  எம்.ஜி.ஆர். அவருக்கு நிகராக ஒருவர் பழ. நெடுமாறன் ஒருவர் வைகோ. இன்று இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும் சிங்கள படைவீரர்களின் போராட்டத்திற்கு நடுவிலும் யாழ்ப்பாணத்தில்  எம்.ஜி.ஆர்.க்கு சிலை இருக்கிறது. நாளை தமிழீழம் அமைகிறபோது மண்ணில் நிலைத்து நிற்கிற சிலை நெடுமாறன் சிலை, வைகோ சிலை. அதை மறந்துவிடாதீர்கள். வைகோவை நீங்கள் கலங்கபடுத்த நினைக்காதீர்கள். எங்களுக்கு என்றும் தமிழகம் துணை இருக்கும். இங்கு  இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் உங்களை உருவாக்கியவர் அப்படிப்பட்ட தலைவர்.

 

 

சேகுவேரா தன் நாட்டுக்காக போராடி விட்டு, பக்கத்துக்கு நாட்டுக்கு போனான், போராடினான்.. அதுபோல இது இனப் போராட்டம். இந்த நாட்டு மக்களுக்காக அல்ல, பக்கத்து நாட்டுக்கு போராடுவேன் என்று கடலில் இறங்கி நின்றவர் வைகோ. நான் சேகுவேராவிற்கும் வைகோவைக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவர் கையில் துப்பாக்கி இருந்தது, இவர் கையில் அது இல்லை. அது மட்டும்தான் வேறுபாடு. அந்த மண்ணில் 2706 இந்து கோவில்களில் குண்டுகளை போட்டது சிங்கள அரசு. இந்து மதத்தை பெரியதாக பேசுகிற இந்திய அரசு இதைப் பார்க்க வேண்டாமா?  ஒரு ராமனின் கோவிலை மசூதி ஆக்கிவிட்டான் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடுகிற இந்திய அரசு, 2706 கோவில்களில் குண்டு வெடித்தது அதை பார்த்துக்கொண்டு இருக்கலாமா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? ஒரு இந்து பெண்ணானா பாஞ்சாலி ஆடையை கலந்ததற்காக பாரதம் நடத்திய இந்தியா, பத்தாயிரம் இந்து பெண்கள் துடிக்க, துடிக்க பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார்களே அப்போது இலங்கையில் எத்தனை பாரதப் போர்களை இந்தியா நடத்தியிருக்க வேண்டும். இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் வேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். தமிழீழ விடுதலை போர் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த அதே கோலத்தில் விடுதலை புலிகளின் போராக மீண்டும் நடக்கும். அதை உறுதியாக நம்புங்கள்".

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal
Paragraph Count
4

 

 "RSS has no right to hold a rally on Gandhi's birthday" - Vaiko interview

 

பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''ஒன்றிரண்டு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் மொத்தத்தில் அவர்கள் (பிஃஎப்இ) பொதுவான மக்களுக்கான பணிகளை தான் செய்துவந்தார்கள். மழை, வெள்ள காலங்களில் ஆங்காங்கே சென்று சமூகசேவைதான் செய்து கொண்டிருந்தார்கள். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவை சேர்ந்தவர்கள் சமூக சேவை தான் செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்ந்த வன்முறை  சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். காவல்துறை நடவடிக்கை எடுத்தது ஒரு அளவில் அது செய்ய வேண்டிய கடமை தான். அதேநேரத்தில் மத வெறியை உண்டு செய்வதை போல் சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவி, இதுவரை இருந்து வருகின்ற சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வேலையில் ஈடுபடுவதையும் நான் கண்டிக்கிறேன்.

 

சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ மட்டும் என்று இல்லை. இப்போது சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கும் ஸ்டாலின் மிகச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஜிஎஸ்டியில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அது ஒரு காரணம் விலைவாசி உயர்வுக்கு. காந்தி பிறந்தநாள் அன்று பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு  எந்த விதமான தகுதியும் கிடையாது என்பது எனது கருத்து'' என்றார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஓட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி மறைந்தார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'கட்சியின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். மதிமுகவால் 3 நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24ம்தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வைகோ, துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோர் அவரது உடலை சுமந்தனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

MDMK Vaiko condemn to shakthi matriculation school

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 

 

அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மான முறையில் இறந்தார்.

 

மாணவியின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக் கொணர்வது பத்திரிகை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தது. தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள் முன் வைத்தார்.

 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.

 

ஜனநாயக நாட்டில் பத்திரிகை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 "This is Dravidian land; we cannot be defeated so easily" - Vaiko

 

வைகோவின் 56 ஆண்டுக்கால வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் மாமனிதன் வைகோ என்ற ஆவணப் படத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சியின் தலைவர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

 

இந்த விழாவில் ஏற்புரை ஆற்றிய வைகோ "இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் சூழ்ந்து வருகிறது. அவற்றை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள்  முன்பை விட வேகமாக போராட வேண்டும்.  தமிழக ஆளுநர்  போட்டி ஆட்சி நடத்துகிறார். மசோதாக்களைத் தூக்கி குப்பையில் போடுகிறார். சமஸ்கிருதம் தான் படிக்க வேண்டும் இந்தி தான் படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஆங்கிலத்துக்கு இடம் இல்லை என்று சொல்லுகிறார். 

 

குருகுல கல்வியை கொண்டு வருவோம் என்று சொல்லுகிறார். இதை எல்லாம் எதிர்க்க முறியடிக்க  மதச்சார்பற்ற சக்திகள் முன்பைவிட வேகமாகப் போராட வேண்டும். நிச்சயம் அவர்களை முறியடிப்போம். இது திராவிட இயக்க பூமி. ரத்தமும் கண்ணீரும் சிந்தி இந்த இயக்கத்தை நாங்கள் கட்டி காத்து வந்திருக்கிறோம். அவ்வளவு எளிதில் எங்களை வீழ்த்தி விட முடியாது"  என்று கூறினார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"Fighter Hero. Real Hero Ambitious Hero Vaiko" - Chief Minister M.K.Stalin

 

வைகோவின் 56 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாமனிதன் வைகோ என்ற ஆவணப் படத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உரைவீச்சால் அரசியலின் ஆழத்தையும் நெடும் பயணத்தினால் தமிழகத்தினை அளந்தவர் வைகோ" என குறிப்பிட்டார்.

 

மேலும் பேசிய அவர் "திரைப்படத்தில் காட்டக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு காட்டப்படுபவர்கள். ஆனால் சித்தரிக்கப்படாத ஹீரோவாக வைகோ செயல்பட்டார். அவர் ரியல் ஹீரோ லட்சிய ஹீரோ ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அவர் போராளி ஹீரோ. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும் கூட வைகோ குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணியாக திமுக போட்டியிட்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சிறைக்கு சென்றோம். ஒப்பந்தத்தை படித்து கூட பார்க்கவில்லை.  கலைஞர் சொல்லிவிட்டார். கையெழுத்து போடுகிறேன் என சொன்னார்.

 

"அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல. கொள்கையில் உயர்ந்தவர் லட்சியத்தில் உயர்ந்தவர். தியாகத்திலும் உயர்ந்தவர் அண்ணன் வைகோ திமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் வைகோவின் பேச்சிற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். 56 ஆண்டு கால அரசியல் வாழ்வை ஒன்றரை மணிநேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது" என பாராட்டி பேசினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !