Skip to main content

தமிழகத்தில் நடப்பது கொலைகார ஆட்சி! நடிகர் வாசு விக்ரம் 

24x7_seithigal
24x7_seithigal

 

தமிழகத்தில் நடப்பது கொள்ளை கும்பலின் ஆட்சி மட்டுமல்ல; தூத்துக்குடியில் போராடிய 13 பேரை சுட்டுக்கொன்ற கொலைகார கும்பலின் ஆட்சியும்தான் நடக்கிறது என்று நடிகர் வாசு விக்ரம் சேலத்தில் நடந்த பரப்புரையின்போது பேசினார்.

 

a


சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வாசு விக்ரம் சேலத்தில் சனிக்கிழமை மாலை (ஏப்ரல் 6, 2019) பல இடங்களில் திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்தார். மக்கள் கூட்டம் நிரம்பியுள்ள இடங்களில் அவர் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:


முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்து விட்டார் என்றாலும், அவர் மக்களுக்கு அளித்த பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக இன்றும் நம் ஒவ்வொருவரின் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கலைஞரின் மறு உருவமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி அல்ல. அது மோடியின் அடிமை ஆட்சி. 


இந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இப்போதுள்ள ஆட்சி கொள்ளை அடிக்கும் ஆட்சி மட்டுமல்ல. இது, கொலைகார ஆட்சி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றதும், கொடநாட்டில் கொலை செய்த சம்பவங்களுமே கொலைகார ஆட்சி என்பதற்கு சான்றாகும்.  

 
கடந்த காலங்களில் திமுக சொன்னதை எல்லாம் செய்தது. அதேபோலதான், தற்போது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றும். மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி விதித்து தொழில்களை முடக்கி விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு வராத பிரதமர், இப்போது தேர்தலுக்காக மட்டுமே வந்து செல்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. தமிழக அமைச்சர்கள் மோடிக்கு அடிமையாகவே செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு நடிகர் வாசு விக்ரம் பேசினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Salem DMK District secretaries

 

கடந்த சில மாதங்களாக திமுக 15வது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, ஒன்றியம், பேரூர், நகரம் உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனுக்கள் செப். 22 முதல் 25ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. செப். 26, 27ம் தேதிகளில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதையடுத்து கட்சித் தலைமை அலுவலகம், புதிய நிர்வாகிகள் பட்டியலை புதன்கிழமை (செப். 28) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

சேலம் மத்திய மாவட்டம்: 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக சேலம் வடக்கு எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். கல்லூரி மாணவராக கழகத்திற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்துள்ளார். மத்திய மாவட்ட அவைத்தலைவராக ஜி.கே.சுபாசு, துணைச் செயலாளர்களாக  ஜி.குமரவேல், திருநாவுக்கரசு, எஸ்.மஞ்சுளா, பொருளாளராக மு.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சி.ராஜேந்திரன், கே.டி.மணி, கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும், நாசர்கான் என்கிற அமான், அ.பூபதி, அ.ராஜேந்திரன், பெ.அசோகன், கன்னங்குறிச்சி குபேந்திரன், ப.குப்புசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.,யின் தம்பி எஸ்.ஆர்.அண்ணாமலை, கே.சத்யா ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சேலம் மேற்கு மாவட்டம்: 


சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, மீண்டும் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் களப்பணிகளைச் சிறப்பாக செய்யக்கூடியவர் என்பதோடு, கோஷ்டி அரசியல் செய்யாதவர் என்பதாலும் கட்சித் தலைமையின் 'குட்புக்'கில் இடம் பிடித்துள்ளார். அதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

 

Salem DMK District secretaries

 

மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக பி.தங்கமுத்து, துணைச் செயலாளர்களாக அ.த.சம்பத்குமார், க.சுந்தரம், எஸ்.எலிசபத் ராணி, பொருளாளராக பி.பொன்னுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக பி.ஏ.முருகேசன், மு.ராமநாதன், எஸ்.பூவா ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக க.அன்பழகன், ஆர்.காசிவிஸ்வநாதன், எஸ்.பி.ரவிக்குமரன், மு.சவுந்திரராஜன், என்.பழனியப்பன், எஸ்.தங்கமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

Salem DMK District secretaries

 

சேலம் கிழக்கு மாவட்டம்: 


சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி நிலவியது. பலத்த போட்டிக்கு இடையிலும் கிழக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

Salem DMK District secretaries

 

மா.செ. பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்திய பாரப்பட்டி க.சுரேஷ்குமார், முதன்முதலாக மாவட்ட துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கு.சின்னதுரை, எஸ்.கோமதி ஆகியோரும் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.வி.ஸ்ரீராம், பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக தும்பல் எ.கணேஷ், சங்கர் என்கிற சாமிநாதன், எம்.மனோகரன், ஜெ.ரேகாபிரியதர்ஷினி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ஷேக் மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், டாக்டர் மலர்விழி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

goondas act on salem rowdy

 

சேலத்தில், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ரஞ்சித்குமார் (25). கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம், முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரையை கொலை செய்தார். 

 

இந்த வழக்கில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, கூட்டாளிகள் கார்த்திகேயன், சதீஸ்குமார், ஹரிசங்கர், அப்துல் கரீம் ஆகியோர் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு காபி கடையில் புகுந்து, அங்கு டீ மாஸ்டரிடம் கத்தி முனையில் 5000 ரூபாய் பணம் பறித்துள்ளார். அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

 

இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமே ரஞ்சித்குமாரும், கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் ரஞ்சித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானபட்டி காவல் ஆய்வாளர், துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். 

 

அதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டதன்பேரில், ரவுடி ரஞ்சித்குமாரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமாரிடம் கைது ஆணை வழங்கப்பட்டது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Police seized 10 kg Gutka at salem
மாதிரி படம்

 

சங்ககிரி அருகே, மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களையும், கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட் பகுதியில் செப். 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில், சங்ககிரி காவல்நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள தாபா உணவகம் முன்பு கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மூன்று கார்கள் நின்று கொண்டிருந்தன. சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரிப்பதற்காக, அந்த கார்களை நோக்கிச் சென்றனர். காவல்துறையினர் வருவதைப் பார்த்து, தாபா உணவகத்தில் இருந்த 3 பேர் திடீரென்று வெளியே ஓட்டம் பிடித்தனர். 

 

தாபா முன்பு, அவர்கள் நிறுத்தியிருந்த மூன்று கார்களையும் விட்டுவிட்டு, தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் துரத்திச்சென்றனர். ஆனால் அதற்குள் தப்பிச்சென்று விட்டனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் தேவி, எஸ்.ஐ சுதாகர் ஆகியோரும் நிகழ்விடம் விரைந்தனர். மூன்று கார்களிலும் சோதனை செய்தபோது, அவற்றில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 633 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. 

 

தாபா உணவக உரிமையாளரிடம் விசாரித்தபோது, தப்பி ஓடிய நபர்கள் பெங்களூருவில் இருந்து கோவை செல்ல முயன்றது தெரிய வந்தது. குட்கா மற்றும் கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கார் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர்கள், கார் ஓட்டுநர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Salem girl child passed away police investigating with her father

 

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் சிறுமி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய புகார் குறித்து, சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயதுடைய மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (22) என்ற இளைஞரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். செப். 19ம் தேதி சம்பத், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

சிறுமியின் பெற்றோர் தன் மகளை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டதாக சம்பத் மீது காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுமியோ, தான் சம்பத்தை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

 

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவிக்கு துணையாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட அறிவழகன் செப். 26ம் தேதி காலை வீட்டுக்கு வந்தார். அங்கு மகள் சடலமாகக் கிடந்தாள். 

 

இதற்கிடையே, சிறுமியின் காதலனான சம்பத்தின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை அவருடைய பெற்றோரே சாதி ஆணவக்கொலை செய்து விட்டதாகவும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவளுடைய தாயார் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் புகார் அளித்தனர். இதற்கிடையே, சிறுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடல், தகனம் செய்யப்பட்டது. 

 

மகளை ஆணவக்கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் சிறுமியின் தந்தை, உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயார் சிகிச்சையில் இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், உடற்கூராய்வின் அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் கிடைத்துவிடும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Oct. 2 Gram Sabha meeting in all panchayats; Calling the public!

 

அக். 2ம் தேதி, காந்தி பிறந்தநாள் அன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடக்கிறது.

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் 2ம் தேதி, காந்தி பிறந்தநாள் அன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்; 

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்த கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), குடிநீர் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், ஊரக விளையாட்டு மேம்பாடு; 

 

அமிர்தகுளம், பசுமை தமிழ்நாடு, நெகிழி ஒழிப்பு மற்றும் மாற்று, கனவுப்பள்ளிகள், கிராமத்தில் எழுத்தறிவு நிலை, ஆண், பெண் பிறப்பு விகிதம், தற்போது கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சிப் பணிகள் விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், அரசின் பிற திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !