Skip to main content

கரோனா ஊரடங்கு... அவசரத் தேவைக்கு இந்த எண்களை அழையுங்கள்! - சென்னை காவல்துறை அறிவிப்பு!

24x7_seithigal
24x7_seithigal

 

Corona curfew ... Chennai Police has released a phone number for emergencies !!

 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் அவசரத் தேவைகளுக்காக காவல் துறையைத் தொடர்பு கொள்ள அவசர அழைப்பு எண்களை சென்னைக் காவல்துறை அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைகளுக்காக 24 மணி நேர (94981 81236, 94981 81239) தொலைப்பேசி எண்களை சென்னைக் காவல்துறை அறிவித்துள்ளது. அத்தியாவசிப் பொருட்கள், ரெம்டிசிவிர் மருந்துக்கு போக்குவரத்துத் தடை ஏற்பட்டால் காவல்துறையை அழைக்கலாம். தடையற்ற ஆக்சிஜன் டேங்கர் போக்குவரத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போக்குவரத்து தொடர்பாகவும் அழைக்கலாம். அதேபோல் தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் இந்த எண்களை அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

dolo 650

 

கொரோனா நோற்தொற்றுக் காலங்களில் அதிகமாக விற்ற மாத்திரை டோலோ 650. கொரோனா காலங்களில் மட்டும் விற்ற டோலோ  650  மாத்திரைகளை அடுக்கினால் புஜ் கலீபாவை விட அதிகமாக இருக்கும் என பெருமை பேசப்பட்டது. 2019 முதல் 2021 டிசம்பர் வரை மட்டும் இந்நிறுவனம் 350 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

 

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு அந்நிறுவனம் 1000 கோடி வரை செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில் "தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுதல், போன்ற குற்றச் செயல்களுக்கு அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது காய்ச்சலுக்கு அளிக்கப்படும் டோலோ 650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக அந்நிறுவனம் 1000 கோடி ருபாய் வரை மருத்துவர்களுக்கு வழங்க அந்நிறுவனம் செலவிட்டுள்ளது என மனுதாரர்  தரப்பில் ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி சந்திர சூட்  "கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட போதும் தனக்கு அந்த மாத்திரைகள் தான் வழங்கப்பட்டது என கூறி இது மிகத் தீவிரமான பிரச்சனை இதை உடனடியாக கவனிக்க வேண்டும்" என கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

BBV154 nasal vaccine trial complete!

 

கரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டம் மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

BBV154 என்ற அந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதித்து வந்தது. அதில், கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் BBV154 செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூக்கு வழியே செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

AIADMK headquarters in whose hands... Chennai police notice!

 

வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தைப் பூட்டி வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்பொழுது ஓபிஎஸ் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்த எடப்பாடி பழனிசாமி,  ''ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கமும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். புகாரளித்தும் காவல்துறை சரியான பாதுகாப்பினை அளிக்கவில்லை'' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சென்னை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட நோட்டீஸில், 'அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள், மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு இருதரப்பு தலைவர்கள் வீடுகளுக்கும் தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலக பிரச்சனை தொடர்பாகவும், கட்சி அலுவலகம் யார் கையில் உள்ளது என்பதை முடிவு செய்யவும், இருதரப்பினரும் வரும் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

central Government Letter to State Governments on corona rising

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

 

கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகிவரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும்படி அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Cannabis seized in Chennai destroyed by fire!

 

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர். 

 

2.O என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செங்கல்பட்டை அடுத்துள்ள தென்மேல்பாக்கத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் பகுதியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., வடக்கு மண்டல காவல்துறை இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழித்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., "சென்னையில் கஞ்சா கடத்தல், பதுக்கல் தொடர்பான 404 வழக்குகளில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார். 


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !