Skip to main content

துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்... இரண்டு அமைச்சர்களும் பதவி நீக்கம்...

24x7_seithigal
24x7_seithigal

 

sachin pilot removed from deputy cm post

 

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 

 

ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், நேற்று காலை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் வீட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்நிலையில், அந்த விடுதியில் இன்று தொடங்கிய இரண்டாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும், சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்தும், விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்குவதற்காக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார் அசோக் கெலாட். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Trouble in Rajasthan Congress! Confusion due to leadership election!

 

ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்தான அறிக்கையை காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று அளிக்க உள்ளனர். 

 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தானின் தற்போதைய முதலமைச்சர் அஷோக் கெலாட் போட்டியிடுகிறார். இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் அஷோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் ராஜஸ்தானின் சூழ்நிலையை ஆய்வு செய்ய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஆய்வு செய்து தயார் செய்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் சமர்ப்பிக்க உள்ளனர்.

 

ராஜஸ்தானின் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டு அஷோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்க சச்சின் பைலட் நெருக்கடி கொடுத்ததால் அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

மேலும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாமல் அவர்கள் தனியே ஒரு கூட்டத்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அளித்த அறிக்கையில் கலந்து கொள்ளாத எம்,எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கையில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் காங்கிரஸ் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி தேதியான செப்.30 வரை எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Rajasthan Congress assembly members meeting today!

 

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று செய்திகள் உலா வரும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று (25/09/2022) இரவு 07.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே பார்வையாளராக கலந்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கட்சியின் ராஜஸ்தான் மாநில பொதுச்செயலாளர் அஜய் மக்கானும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருக்கிறார். இது ஒரு வாரத்திற்குள் நடைபெறும் இரண்டாவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஆகும். 

 

முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதற்கு, சோனியா காந்தி குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியில் தனக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்கவே அவர் விரும்பக்கூடும். அதேநேரம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களுக்கு அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டாலும், முதலமைச்சராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"I am going to contest for the post of Congress President"- Chief Minister's sudden announcement!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார். 

 

அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளேன். ராகுல் காந்தி தனது குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார்" எனத் தெரிவித்தார். 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 The husband threw his sleeping wife in front of the train... Shocking CCTV footage!


தொழில்நுட்ப  வசதிகள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பொதுவெளியில் நடக்கும் தவறுகளை அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டுகிறது சிசிடிவி காட்சிகள்.அப்படி ரயில் நிலையத்தில் நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை கணவன் ரயில் முன் தூக்கி எறிந்து  கொலை செய்யும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் இரவு வேளையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த கணவன் ரயில் வரும் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்துச் சென்று தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டு, இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். இந்த சம்பவத்தில் ரயில் மோதி அந்த தாய் உடல் சிதறி உயிரிழந்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

BJP's student organization that broke the ban ... the rally ended in riots!

 

மாணவர்கள் சங்க தேர்தலில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தடையை மீறி அங்கு பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது. தடையை மீறி பேரணி சென்ற நிலையில் மாணவர் அமைப்பிற்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதில் மாணவர் தரப்பினருக்கும், காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தடையை மீறி பேரணி நடத்தியதால்தான் இந்த சம்பவம் மோதலில் முடிந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !