Skip to main content

"கரோனா பணிகளை சமாளிக்க  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி வழங்க வேண்டும்" - நாராயணசாமி கோரிக்கை!

24x7_seithigal
24x7_seithigal
"Central government should fund state governments to deal with corona tasks" - Narayanaswamy demands!

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
 
"புதுச்சேரியில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர்களால் நாளுக்குநாள் தொற்று அதிகரிப்பதை அடுத்து இன்று முதல் அனைத்து கடைகளும் இரண்டு மணிவரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டது போல் மத்திய அரசு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் இலவச அரிசியை வழங்க வேண்டும். கரோனா பணிகளை சமாளிக்க  மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி வழங்க வேண்டும். மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வது பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு இதனை உடனே குறைக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு தேவைக்கேற்ப செவிலியர், ஆஷா பணியாளர்களை நியமிக்க சுகாதார துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கான சம்பளம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும். லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்களை தாக்கி உள்ளதா என மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்" இவ்வாறு அந்த வீடியோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 Hundreds of Puducherry fishermen blocked the road!

 

புதுச்சேரியில் மீன் வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக மீன் அங்காடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. பாரம்பரியமாக நாங்கள் இதே மீன் அங்காடியில் மீன் விற்பனை செய்து வருவதால் வேறு இடத்திற்கு மாற முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த மீன் வியாபாரிகள், நவீன மீன் அங்காடிக்கு செல்ல அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் மீன் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் இரண்டு மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெற்று வருவதால் நேரு வீதி, காந்தி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து எங்களுக்கு உறுதிமொழி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மீனவர்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"There are no contradictions among the National Democratic Alliance MLAs!"- Puducherry Speaker Selvam Patti!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமெனவும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

"There are no contradictions among the National Democratic Alliance MLAs!"- Puducherry Speaker Selvam Patti!

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சட்டபேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத்  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், "சில அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை. சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணிக் கட்சியினரை விமர்சிக்காமல், சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்சனைகளைத் தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்" என கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"We condemn BJP legislators"- government whip action interview!

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் ரங்கசாமி அலட்சியப்படுத்திப் பழிவாங்குவதாகவும் கூறி முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். 

 

தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து, மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முடித்துக் கொண்டார். 

"We condemn BJP legislators"- government whip action interview!

இந்நிலையில் கூட்டணியில் இருந்து கொண்டு முதலமைச்சரைப் பதவி விலகக் கோரிய பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் இருந்து கொண்டே பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்வதை முதலமைச்சர் கண்டிக்க வேண்டுமென முதலமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசு கொறடா ஆறுமுகம், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம். எந்த நிலையிலும், எங்கள் கட்சியின் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாளை சபாநாயகர் வந்தவுடன் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியை மாற்றக் கோரும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Full blockade in Puducherry!

 

இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாகப் பேசியதாக தி.மு.க. எம்.பி ஆ.ராசாவைக்   கண்டித்தும், அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் இன்று (27/09/2022) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

 

முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Full blockade in Puducherry!

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்து என இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுச் சொத்தை சேதப்படுத்துவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

 

இதனிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு காலாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதுச்சேரி உப்பளத்திலுள்ள இமாகுலேட் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி வழக்கம் போல் இயங்கியது. இது குறித்து அறிந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிசெல்வம் மற்றும் இந்து முன்னணியினர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று பள்ளியை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

அதனை தொடர்ந்து, அங்கு வந்த பெற்றோர்கள் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கமிட்டவாறே பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

திடீரென பெற்றோர்களுக்கும், இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 Stone pelting on the buses... Police gathering

 

திமுக  எம்பி ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதித்ததாக கூறி இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் மிக குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது. இதனால் பேருந்தின் முகப்பு கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !